Monday, July 13, 2009

நூறாவது பூ !



வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், 95
அரக்கு விரித்தன்ன பரு


ஏர்அம் புழகுட


தமிழுக்கு இத்தனை பூக்களுண்டு..

இனியா

எனக்கு நீ மட்டும்

தான் !!

15 comments:

வால்பையன் said...

நச்சுன்னு முடிச்சிடிங்க!

அருண். இரா said...

நன்றி ங்க வால்!! வந்தது மகிழ்ச்சி!

Thenammai Lakshmanan said...

who is that iniya?

nice one to dedicate her

nalla irukku vaal payyan unga kavithai

பனித்துளி சங்கர் said...

உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி !

வாழ்த்துக்கள் !!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Priya said...

வாவ், நல்லா எழுதி இருக்கிங்க. யாருங்க அந்த இனியா... இத்தனை பூக்களையும் வென்றவரா?!

santhanakrishnan said...

பூக்களால் ஆனதோ
உங்கள் தேசம்?

Lakshmanan said...

Dear Friend,

I read ur poems, and i am telling i gave u rank after Tabu shankar.
i REALLY LOVED poems.

Summa irukkaravanukkum love vandhidum.

Lakshmanan said...

Dear Friend,

I read ur poems, and i am telling i gave u rank after Tabu shankar.
i REALLY LOVED poems.

Summa irukkaravanukkum love vandhidum.

Lakshmanan said...

Dear Friend,

I read ur poems, and i am telling i gave u rank after Tabu shankar.
i REALLY LOVED poems.

Summa irukkaravanukkum love vandhidum.

சமுத்ரா said...

nice

மாய உலகம் said...

வாவ், நல்லா எழுதி இருக்கிங்க.

test said...

நீங்களும் ஆன்லைன் முலம் வருமானம் பார்க்க ஆசை உள்ளவரா கவலைய விடுங்கள் இலவசமா பயிற்ச்சி எடுங்கள் உங்களுடைய ஆசையை நிறைவு செய்து கொள்ளுங்கள் இன்றே கிழே உள்ள இணையதளத்திற்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுங்கள்

ஆன்லைன் வேலை இலவச பயிற்ச்சிகள்

Unknown said...

https://youtu.be/XOhXLoHtRSQ

Unknown said...

https://youtu.be/r_R6DskWYOQ