Sunday, April 22, 2007

என் இனிய இனியா!! பாகம்- 1

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதில் சொல்..

நீ
மஞ்சள் சுடிதாரில்
என்னைக் கடந்து
செல்கிறாய்.
என்னைப்
பார்த்து
ஒரு குழந்தைக்
கேட்கிறது
“ஏன் இந்த வாவில்லுக்கு
மட்டும் ஒரெ வண்ணம்?”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதல் வீரன்

நான்
ஒரு
விண்வெளி வீரனாய்
இருந்த்திருந்தால்
செவ்வாய்
கிரகத்தை
ஆராய்ந்த்திருப்பேன்..

அடியேன்
காதல் வீரன்
உன்
பாதச்சுவடுகளின்
நீள அகலங்களை
குறிப்பெடுத்துக்
கொண்டிருக்கிறேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் மனம் VS உன் புன்னகை


நீ
இல்லாத போது,
“இனி உன்னைக்
காதலிக்கக்கூடாது”
என்று சத்தியம்
போடுகிறது
இந்த மனம்..

பாவம் அதற்கு
தெரியாது
போலும்..
உன்
ஒற்றைப்புன்னகை
ஒராயிரம் சத்தியங்களை
தகர்த்து விடும்
என்று!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் கிரகமே!!

இனியா!
வான்வெளி விஞ்ஞானிகள்
கண்ணில் சிக்கி
விடாதே..
ஒன்பதாவது கிரகம்
புளூட்டோவை
நீக்கி
விட்டார்களாம்..

என் குடும்பத்திலிருந்து
பிரித்து
சூரியக்குடும்பத்தில்
உன்னைச்சேர்க்க
போட்டி போடுக்கின்றன
உலக
நாடுகள்!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பு மழையுடன்,
அருண்..!

5 comments:

Ayyanar Viswanath said...

கவிஞரே
வாங்க! வாங்க!! வலைப்பதிவுலகத்திற்க்கு

/உன்
பாதச்சுவடுகளின்
நீள அகலங்களை
குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறேன்!/

புதுசா இருக்கு அருண் :)

/சூரியக்குடும்பத்தில்
உன்னைச்சேர்க்க/

நல்ல துவக்கம் அருண் நிறைய எழுது

தமிழ்மணத்துல சேர்ந்திடுறியா?

seenu said...

இனியா...!!

இனியும் எங்கள் ஹிட்லரை

யுத்த களத்தில் தவிக்க விடாதே..!!!

Anonymous said...

un kavithaikal ellamey super da..nan silavarrai padithen..
athilum kuripaga

நீ
மஞ்சள் சுடிதாரில்
என்னைக் கடந்து
செல்கிறாய்.
என்னைப்
பார்த்து
ஒரு குழந்தைக்
கேட்கிறது
“ஏன் இந்த வானவில்லுக்கு
மட்டும் ஒரெ வண்ணம்?”

enra kavithai migavum nanraga ullathu...

"pluto vai neeki vitarkalam" enra seithiyinai vaithu ezhuthiya kavithai super...

inaiya thalathil veliyittathu paratirkuriyathu...

ne love pannirupa poliruku...
kathal kavithaikal nanraga iruku...

melum melum thodara en vazthukkal...

anbudan

Anonymous said...

Hey arun

i really surprised to read your poetic lines

its brilliant in expressing
the inner feelings

good work keep it up

so you fell in love

good

Ramesh V

அருண். இரா said...

அய்யனார் , சீனு சார் ,ரமேஷ் அண்ணா, அனானி ..அனைவர்க்கும் நன்றி நன்றி !